சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டி தலைவர் வூ பாங்கோவும் இந்திய அரசுத் தலைலர் பிரதீபா தேவிசிங் பாட்டில் அம்மையாரும் 27ம் நாள் பெய்சிங்கில் உரையாடினர்.
சீனாவும் இந்தியாவும் முக்கிய அண்டை நாடுகளாகும். விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளாகவும் திகழ்கின்றன என்று வூ பாங்கோ தெரிவித்தார். தற்போது, வரலாற்றின் புதிய துவக்க நிலையில் இருக்கின்ற சீன-இந்திய உறவுக்கு, அரிய வளர்ச்சி வாய்ப்பு உண்டு என்றும், இந்தியாவுடன் இணைந்து, இரு நாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவின் தொடர்ச்சியான, நிதானமான, சீரான வளர்ச்சியைத் தூண்ட சீனா விரும்புவதாகவும் வூ பாங்கோ தெரிவித்தார்.
சீனத் தேசிய மக்கள் பேரவை, இந்திய நாடாளுமன்றத்துடன் கூட்டாக முயற்சி மேற்கொண்டு, இரு நாட்டு நாடாளுமன்றங்களுக்கிடை எதார்த்த ஒத்துழைப்பை மேலும் முன்னேற்ற விரும்புகின்றது என்று வூ பாங்கோ தெரிவித்தார்.
இந்தியாவின் அனைத்து கட்சிகளும், சீனாவுடன் உறவை வளர்க்க ஆதரவளிக்கின்றன. சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டு நட்பார்ந்த ஒத்துழைப்புறவின் வளர்ச்சியைத் தூண்ட இந்தியா விரும்புவதாக பிரதீபா தேவிசிங் பாட்டில் அம்மையார் தெரிவித்தார்.