சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவர் சியாசிங்லின் 28ம் நாள் பெய்சிங்கில் இந்திய அரசுத் தலைரவர் பிரதிபா பாட்டில் அம்மையாரைச் சந்தித்துரையாடினார்.
தற்போதைய சர்வதேச நிலைமையின் மாபெரும் சீர்திருத்தப் பின்னணியில் சீன-இந்திய உறவின் நெடுநோக்கு முக்கியத்துவம் மேலும் முக்கியமானது. இரு நாடுகளின் பொது நலன் மற்றும் இரு நாட்டு மக்களின் பொது விருப்பத்தைக் கருத்தில் கொண்டு பஞ்ச சீல கோட்பாடுகளுக்கிணங்க ஆசியா மற்றும் உலகின் அமைதி, நிதானம் மற்றும் செழுமைக்கு சீனாவும் இந்தியாவும் பங்கு ஆற்ற வேண்டும் என்று சியாசிங்லின் சந்திப்பில் தெரிவித்தார்.
தற்போதைய நிலைமையில் இரு நாடுகள் கைகோர்த்துக் கொண்டு ஒத்துழைத்து, வல்லுனர்களிடை பரிமாற்றத்தை விரிவாக்க வேண்டும். பொது வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்று பிரதிபா பாட்டில் கூறினார். தவிரவும், இந்தியா திபெத் தன்னாட்சிப் பிரதேசம் சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. திபெத்தியரை பயன்படுத்தி இந்தியாவில் சீனாவை எதிர்க்கும் அரசியல் நடவடிக்கை நடத்த யாவருக்கும் இந்தியா அனுமதி வழங்காது என்றும் அரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் அம்மையார் உறுதிப்படுத்தினார்.