மே 29ம் நாள் ஐ.நாவின் சர்வதேச அமைதிக் காப்போர் நாளாகும். இன்று முற்பகல் 10ம் மணிக்கு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் ஐ.நா காட்சி அரங்கில், இந்நாளை நினைவு கூர்கின்ற நடைபெற்றது. இது, சர்வதேச அமைதிக் காப்போரின் அர்ப்பண எழுச்சி மற்றும் துணிவைப் பாராட்டி, இந்த இலட்சியத்திற்காக தங்களையே பலிகொடுத்தவர்களை நினைவு கூர செய்கிறது.
சீன பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவின் துணைத் தலைவர் chen sanhu சீன தரப்பின் சார்பில் உரை நிகழ்த்தினார். ஜ.நாவின் அமைதிக் காப்பு நடவடிக்கைகளில் கலந்து கொண்டோருக்கு உயர் மதிப்பை தெரிவித்த அவர், அக்கடமைகளில் தங்களையே பலிகொடுத்த வீரர்களை நினைவு கூர்ந்தார்.