மே 29ம் நாள் ஐ.நாவின் சர்வதேச அமைதிக் காப்போரின் நாளாகும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சர்வதேச அமைதிக் காப்போரின் வாரம் எனும் நடவடிக்கை அதே நாளில் துவங்கியது. இந்த வாரத்தில், ஐ.நா காட்சி அரங்கும், ஐ.நா நிலக்கண்ணி வெடி அகற்றும் செயல் அலுவலகமும் பல்வகை முறையில் பயணிகளிடம் அமைதிக் காப்புப் பணிகளை அறிமுகப்படுத்தும்.
இதுவரை, ஐ.நாவின் அமைதிக் காப்பு நடவடிக்கைகளுக்கு சீனா 16 ஆயிரம் அமைதிக் காப்புக் காவல்துறையினரை அனுப்பியுள்ளது. தற்போது, 2045 சீனப் பணியாளர்கள் அமைதிக் காப்பு கடமையை மேற்கொண்டு வருகின்றனர்.