இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 தெற்காசிய நாடுகள் 7ம் நாள் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் Kun Ming நகரில் பொருளாதார வர்த்தக அறிமுக நடவடிக்கை நடத்தின.
இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், நேபாளம், இலங்கை, மாலத் தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய ஏழு நாடுகளின் முதலீட்டு முன்னேற்றத்துறை அதிகாரிகள், தத்தமது நாட்டின் முதலீட்டுச்சூழல், முதலீட்டுக் கொள்கை மற்றும் திட்டவட்டமான ஒத்துழைப்பு திட்டப்பணிகள் பற்றி விவரித்தனர். தெற்காசியாவிலிருந்து இறக்குமதி செய்வதை அதிகரித்து, தெற்காசிய தொழில் நிறுவனங்கள் சீனாவுக்கு வந்து பொருட்காட்சி நடத்தி, பொருட்களை அறிமுகப்டுத்துவதை சீனா ஊக்குவிக்கும் என்று சீன வணிக அமைச்சகத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக, சீன-சார்க் அமைப்பின் பொருளாதார வர்த்தக உயர் நிலை கூட்டம் Kun Ming நகரில் நடைபெற்றது. இரு தரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டை விரிவாக்கி, வசதிப்படுத்துவது, வணிகச் சங்கங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்குமிடை தொடர்பை வலுப்படுத்துவது, மனித வள ஆற்றல் ஒத்துழைப்பை வலுப்படு்த்துவது, மனிதத்தொடர்பு மற்றும் கல்வியியல் பரிமாற்றத்தை விரைவுபடுத்துவது முதலியவை பற்றி சீன மற்றும் தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.