• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வளர்ச்சி மற்றும் தூய்மை அதிகரிப்பில் கவனம்
  2010-06-22 18:27:44  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகப் பொருளாதார மீட்சி நெடுநோக்கு பற்றி 20 நாடுகள் குழு விவாதம் நடத்தும்போது, வளர்ச்சி மற்றும் தூய்மை அதிகரிப்புத் தொடர்பான பிரச்சினைகளில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்தார்.

டோரண்டோ நகரில் நடைபெறவுள்ள 20 நாடுகள் குழுவின் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வேலையின்மை விகிதம் உயர்வு, உணவு மற்றும் வணிகப் பொருட்களின் விலைவாசி உயர்வு, தொடர்ந்து வரும் சமனற்ற நிலை ஆகிய காரணங்களால், வறிய மக்கள் தொகை பெருமளவில் அதிகரித்து, சமூக உறவு பதட்டமாக மாறியது என்று பான் கி மூன் கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார மறுமலர்ச்சியை முன்னேற்றும் அதேவேளை, உலகப் பொருளாதாரத்தின் நிதானத்தையும் சுற்றுச்சூழலின் தொடர்ச்சியையும் வலுப்படுத்தி, புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்கை நனவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040