ஜூன் 28ம் நாள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் கம்போடிய நாட்டு அரங்கு நாளாகும். அந்நாட்டின் கலைஞர்கள் சிறந்த கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். சீன வணிக அமைச்சரின் உதவியாளர் wangchao, கம்போடிய வணிக அமைச்சர் Cham Prasidh இருவரும், கொண்டாட்ட நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர்.
கம்போடிய அரங்கு நாளின் நடவடிக்கைகளின் மூலம், அந்நாட்டு மக்களின் அறிவுத்திறமையும் புத்தாக்க எழுச்சியும் வெளிப்படுத்தப்படுகிறது என்று wangchao கூறினார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, இம்மாநகரின் முக்கிய பகுதியாக விளங்குகிறது. இதன் மூலம், கம்போடிய பண்பாட்டுச் செல்வம், வரலாற்று மரபுச் செல்வம் மற்றும் சிறந்த நாகரிகத்தை பார்வையாளர்கள் கண்டுரசிக்கலாம் என்றுCham Prasidh தெரிவித்தார்.