ஷாங்காய் உலகப் பொருட்காட்சி தொடங்கி இன்றோடு 61 நாட்கள் ஆகின்றது. உலகப் பொருட்காட்சியின் மூலம், 2 கோடியே 10 இலட்சம் சுற்றுலா பயணிகள் உலகின் பல்வேறு சிறப்புகளை ரசித்து, உயர் அறிவியல் தொழில்நுட்பம் நிறைந்த எதிர்கால வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொண்டனர். இத்தோடு, உலகப் பொருட்காட்சிப் பூங்கா, அதிக சுற்றுலா பயணிகளின் வரவால் ஏற்பட்ட சோதனையைத் தாக்குபிடித்துள்ளது.
மே முதல் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்கிய பின், பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஜுன் 26ம் நாள், உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் நுழைந்த பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டியது என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையத்தின் தலைவர் ஹூங் ஹாவ் தெரிவித்தார். அவர் கூறியதாவது—
மே முதல் நாள் தொடக்கம், ஜுன் 5ம் நாள் வரை, ஒரு கோடி சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்தனர். இது மொத்தம் 36 நாட்கள் மட்டுமே. பயணிகளின் எண்ணிக்கை, 2வது கோடியை எட்டியது 23 நாட்களில். முன்பை விட 13 நாட்கள் குறைவு என்று அவர் கூறினார்.
ஜுன் இறுதி வரை, உலகின் 39 நாடுகள் 6 சர்வதேச அமைப்புகள் 14 நகரங்கள் ஆகியவை அரங்கு நாள், கௌரவ நாள் உள்ளிட்ட சிறப்பு நடவடிக்கைகளை நடத்தின. இந்த நாடுகள் அமைப்புகள் மற்றும் நகரங்கள், சீராக வடிவமைத்து, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை பரிமாற்ற மேடையாக மாற்றின.
உலகப் பொருட்காட்சி நடத்தும் காலத்தில், பூங்காவிலுள்ள 1 இலட்சத்து 90 ஆயிரம் தன்னார்வத் தொண்டர்கள் தொடர்ந்து சேவை புரிவர். இது பற்றி சுற்றுலா பயணி ஒருவர் கூறியதாவது—
அவர்கள் எனக்கு வழிகாட்டினர். புன்னகையுடன் வணக்கம் தொரிவித்தனர். அவர்கள் அளித்த உதவி, நான் எதிர்பார்த்ததை விட அதிகம் என்று அவர் தெரிவித்தார்.
தேவைப்படி, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையம், ஆங்கிலம், ஜெர்மனி, பிரெஞ்சு, ஜப்பான், ரஷியா ஆகிய மொழிகள் பேசும் தன்னார்வத் தொண்டர்களை சேர்த்துள்ளது.
கோடைக்காலத்தில், ஷாங்காய் மாநகரில் வெப்பம் அதிகம். தற்போது பூங்காவில் 17 ஆயிரம் இருக்கைகள். 12 ஆயிரம் நிழல் தரும் குடைகள் உண்டு. தொடர்பான வாரியங்கள், மின் விசிறி, குளிர் நீர் தருமிடம் முதலிய வசதிகளை அதிகரிக்கும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையத்தின் தலைவர் ஹூங் ஹாவ் தெரிவித்தார்.