கடந்த சில ஆண்டுகளில் கரி குறைந்த நகரங்களைச் சீனா ஆக்கப்பூர்வமாக கட்டியமைத்து, சுற்றுச்சூழல் மாசுப்பாட்டைத் தொடர்ந்து குறைத்ததோடு, பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ள விரும்புகிறது என்று சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்த்திருத்த ஆணையத்தின் துணை தலைவரும் தேசிய எரியாற்றல் ஆணையத்தின் தலைவருமான சாங் கோ பாவ் 3ம் நாள் நன் ஜிங் நகரில் தெரிவித்தார்.
தற்போது சீனா அமெரிக்காவுடன் புதுப்பிக்க வல்ல எரியாற்றல் கூட்டாளியுறவை உருவாக்கியுள்ளது. இரு நாடுகள், தூய்மை எரியாற்றல் ஆராய்வு மையத்தை நிறுவி, பல ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டன. ஜப்பானுடன் கரி குறைந்த நகரத்தை உருவாக்கும் திட்டப்பணி உட்ளிட்ட நிகழ்ச்சிகளை உருவாக்கின. தொடர்பான நாடுகளுடன் அனுப்பவங்களை பகிர்ந்து கொண்டு, எரியாற்றல் மற்றும் நகரத்தின் கரி குறைந்த வளர்ச்சியை முன்னேற்ற பங்காற்ற சீனா விரும்புகிறது என்று சாங் கொ பாவ் கூறினார்.