கடந்த இரண்டு திங்களில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் இயங்கிய நிலைமை குறித்து, சர்வதேச கண்காட்சி பணியகத்தின் தலைவர் ஜீன்-பியர் லபாஃன் மனநிறைவு தெரிவித்தார்.
9ம் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். நடப்பு உலகப் பொருட்காட்சி, வெளிநாட்டுப் பயணிகளுக்கு சிறப்பான மொழி பெயர்ப்பு சேவை வழங்கியதால், வெளிநாட்டவர்கள் ஷாங்காய் மாநகரில் மொழி தடையின்றி உலகப்பொருட்காட்சியை அனுப்பவிக்கமுடிவது, குறிப்பிடத்தக்கது என்று லபாஃன் தெரிவித்தார்.