உயிரான யாங்சியாறு என்ற தலைப்பிலான யாங்சியாற்றின் நீர் உயிரினப் பாதுகாப்பு தொடர்பான வார பரப்புரை நடவடிக்கை ஜுலை 24ம் நாள் காலை ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் துவங்கியுள்ளது.
சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு வட்டாரங்கள் யாங்சியாற்றில் வாழ்கின்ற உயிரினங்கள் மீது கூட்டு கவனம் செலுத்தி அப்பிரதேசத்தின் உயிரின சூழல் தொடர்ந்து வளர்வதை நிறைவேற்றச் செய்வது இந்நடவடிக்கையின் நோக்கமாகும் என்று சீன வேளாண் துறை அமைச்சகத்தின் யாங்சியாற்றின் மீன் வள நிர்வாக ஆணையம் உள்ளிட்ட வாரியங்கள் இந்த நடவடிக்கையை ஏற்பாடு செய்துள்ளன. துவக்க விழாவில் சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த சுமார் 100 முனைவர்கள் சமூகத்துக்கு ஆலோசனை ஒன்றை வெளியிட்டனர். செயல்பட்டு தாய் ஆற்றைப் பாதுகாத்து இணக்கமான யாங்சியாற்றை நிர்மானிப்போம் என்பது இவ்வாலோசனையின் முக்கிய அம்சமாகும்.
யாங்சியாற்றின் பள்ளத்தாக்கு பிரதேசம் சீனாவில் ஐந்தில் ஒரு பகுதி நிலபரப்பை வகிக்கின்றது. மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்களை இந்த ஆறு வளர்க்கின்றது. சுமார் 1100 வகை நீர் உயிரினங்கள் இந்த ஆற்றில் வாழ்கின்றன.