ஜூலை 24ம் நாள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் செனகல் அரங்கு நாளாகும். இந்நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் Amadou Niangஉம், சீன துணை வணிக அமைச்சர் Jiang Yao Pingஉம் இன்றைய கொண்டாட்ட நடவடிக்கையில் கலந்து கொண்டனர். இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 29 ஆண்டுகளில், இரு நாட்டுத் தலைவர்களின் தூண்டுதலுடன், இரு நாடுகள் ஒன்றுக்கொன்று மதிப்பும் நம்பிக்கையும் அளித்துள்ளன. பல்வேறு நிலைகளில் இரு நாடுகளுக்கிடை தொடர்புகள் அதிகம். பொருளாதாரம் வர்த்தகம், பண்பாட்டு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பு பயன்மிக்கவை.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு புதிய இயக்கு ஆற்றலை வழங்கியுள்ளது என்று Jiang Yao Ping தெரிவித்தார். செனகல் அரங்கை அவர் வெகுவாக பாராட்டினார்.
உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வதில் செனகலுக்கு சீன அரசு அளித்துள்ள உதவிக்கு Amadou Niang நன்றி தெரிவித்தார். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பல்வேறு துறைகளில் செனகல் கண்டுள்ள வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை காட்டும் சன்னலாகும் என்று அவர் தெரிவித்தார்.