ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்கிய கடந்த 3 திங்களில் பொருட்காட்சிப் பூங்கா நிதானமாகவும் ஒழுங்காகவும் செயல்பட்டு வருகிறது. முதல் கட்டத்தில் பயணிகளின் வருகை அதிகரித்தது. தற்போது இந்த எண்ணிக்கை நிதானமாகி 31ம் நாள் நண்பகல் வரை 3 கோடியே 48 இலட்சத்துக்கு மேலான பயணிகள் இப்பொருட்காட்சியைப் பார்வையிட்டனர். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகார ஒருங்கிணைப்பு ஆணையத்தின் தலைவர் hong hao 31ம் நாள் ஷாங்காயில் இதைத் தெரிவித்தார்.
தற்போது உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் பல்வேறு காட்சியரங்குகளும் சேவை உத்தரவாதப் பணிகளும் சீராக உள்ளன. பல்வேறு நடவடிக்கைகளும், பாதுகாப்பு, பணிகளும் சுமூகமாக நடைபெற்று வருகின்றன. கடும் விபத்துகள் ஏதுவும் நிகழவில்லை என்று hong hao அறிமுகப்படுத்தினார்.