ஜுலை 31ம் நாள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் 92ம் நாளாகும். உலகப் பொருட்காட்சி செய்தி மையத்தில் முதல் தொகுதி பல்கலைக்கழக மாணவத் தொண்டர்கள் 3 திங்கள் சேவை புரிந்து பல்வகை கடமைகளை முடித்துக் கொண்டனர். ஆகஸ்ட் முதல் நாள், செய்தி மையத்தின் 2வது தொகுதி தொண்டர்கள் கடமைகளை மேற்கொள்வர்.
செய்தி மையம் ஏப்ரல் 27ம் செயல்பட துவங்கிய பின், இங்குள்ள 400க்கு மேலான தொண்டர்கள் பல்வகை சேவைகளை புரிந்தனர். செய்தி ஊடகங்களின் கோரிக்கைகளை வெற்றிகரமாக சமாளித்தனர். செய்தியாளருக்கு சீரான அதிகமான வசதிகளை வழங்கிய அவர்கள் பாராட்டப்பட்டனர்.