நவம்பர் 12ம் நாள், 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீன தென்பகுதியிலுள்ள குவாங் சாவ் நகரில் நடைபெறும். இந்த போட்டி துவக்கத்துக்கு முன்பான 100வது நாள், ஆக்ஸ்ட் 4ம் நாளாகும். இந்த முக்கிய நாளைக் கொண்டாட, குவாங் சாவ் மாநகரில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த போட்டி நெருங்கி வரும் வேளையில், ஆயத்தப் பணி, முக்கிய கட்டத்தில் இருக்கின்றது.
2004ம் ஆண்டில், 2010ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை, குவாங் சாவ் மாநகரம் வெற்றிகரமாக பெற்றது. ஆசிய விளையாட்டுப் போட்டியை வரவேற்பது, புதிய வாழ்க்கையை உருவாக்குவது என்ற தலைப்பின் படி, குவாங் சாவ் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பல்வேறு ஆயத்தப் பணிகள், திட்டப்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றதன. முதல் கட்ட ஆயத்தப் பணி முடிவடைந்துள்ளது. இப்போது ஆயத்தப் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று குவாங் சாவ் மாநகரின் துணை தலைவரும் குவாங் சாவ் ஆசிய விளையாட்டுப் போட்டி அமைப்புக்குழுவின் துணை செயலருமான சு யுய் சேன் கூறினார். அவர் கூறியதாவது--
குவாங் சாவ் ஆசிய விளையாட்டுப் போட்டி அமைப்புக்குழுவின் பணியாளர் அனைவரும், இந்த போட்டிக்கான ஆயத்தப் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துகின்ற அமைப்புமுறை, நிர்வாக வாரியம் என்ற கட்டமைப்பிலிருந்து விளையாட்டுப் போட்டியை கட்டுபடுத்தும் கட்டமைப்புக்கு மாறுகின்றது என்றார் அவர்.
குவாங் சாவ் ஆசிய விளையாட்டுப் போட்டியின் தேவையை நிறைவு செய்ய, முந்தைய 60 விளையாட்டரங்குகளுடன், 12 புதிய விளையாட்டரங்குகளை குவாங் சாவ் நகராட்சி கட்டியமைத்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் விளையாட்டரங்குகளை, பொது மக்கள் பயன்படுத்தச் செய்ய வேண்டும் என்று விளையாட்டரங்கு கட்டியமைக்கப்பட்ட போது குவாங் சாவ் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக்குழு முடிவு செய்தது. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டி, குவாங் சாவ் நகருக்கு செழுமையான விளையாட்டு பண்பாட்டு மரபு செல்வத்தை கொடுக்கும் என்று குவாங் சாவ் மாநகரின் துணை தலைவர் சு யுய் சேன் தெரிவித்தார். அவர் கூறியதாவது—
ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் சாதனையைப் பொது மக்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது இந்த விளையாட்டரங்குகளை கட்டியமைக்கும் நோக்கங்களில் ஒன்றாகும் என்றார் அவர்.