ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் வங்காள தேச அரங்கு நாள் செப்டம்பர் 20ம் நாள் கொண்டாடப்பட்டது. சீன துணை வெளியுறவு அமைச்சர் சுன் தோ வங்காள தேசத்தின் வணிக அமைச்சர் பாருக் ஹென், சீனாவுக்கான வங்காள தேச தூதர் H.E.Munshi Faiz Ahmad முதலியோர் அரங்கு நாள் நடவடிக்கையில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினர்.
சுன் தோ உரைநிகழ்த்திய போது சீனாவுக்கும் வங்காள தேசத்துக்குமிடையில் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 35 ஆண்டுகளில் இருதரப்புறவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தார்.
அரங்கு நாள் நடவடிக்கையில் வங்காள தேசத்திலிருந்து வந்த கலைஞர்கள் வங்கேள தேசத்தின் சுதந்திரம், வளர்ச்சி மற்றும் மக்களின் இன்பான வாழ்க்கையை வர்ணிக்கும் நடனங்களை அரங்கேற்றினர்.