சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூனை நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் புதன்கிழமை சந்தித்துரையாடினார். பல்வேறு துறைகளில் ஐ.நாவின் பணிகளில் சீனா தொடர்ந்து ஆக்கமுடன் பங்கேற்கப் போவதாக வென்ச்சியாபாவ் தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள், முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள ஆகியவற்றிலும், ஐ.நாவுடன் இணைந்து சிறந்த தொடர்பு, ஒருங்கிணைப்பு மற்றும் பயனுள்ள ஒத்துழைப்புகளை சீனா மேற்கொண்டு வருகிறது. ஐ.நாவுடனான கூட்டாளியுறவை வலுப்படுத்தி, சர்வதேச விவகாரங்களில் ஐ.நா மைய பங்கு ஆற்றுவதை முன்னேற்ற சீனா தொடர்ந்து முயற்சிகளை எடுக்கும் என்றார் வென்ச்சியாபாவ்.
வறுமை ஒழிப்பு மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை விரைவுப்படுத்துவதில் சீனா குறிப்பிடத்தக்க சாதனைகளை பெற்றுள்ளது. ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்காக நீண்டகாலமாக பாடுபடுகின்ற சீனா, புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை நனவாக்க முக்கிய பங்காற்றியுள்ளது. உலக காலநிலை மாற்றத்தை சமாளிப்பதிலும், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத பிரச்சினையைத் தீர்ப்பதிலும் சீனா ஆற்றிய ஆக்கமுள்ள பங்கை, ஐ.நா உயர்வாக பாராட்டுவதாக, பான் கி மூன் தெரிவித்தார்.