உலகப் பொருட்காட்சி மண்டலத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை, 23ம் நாளில் முதல்முறையாக 6லட்சத்தைத் தாண்டியது. இம்மண்டலம் திறக்கப்பட்ட பிறகு மிக உயர்வான பதிவாகவும் இது உள்ளது. நேற்று வரை அம்மண்டலத்தை பார்வையிட்ட பயணிகளின் மொத்த எண்ணிக்கை 5கோடியே 50லட்சத்தை தாண்டியுள்ளது என்பது அறியத் தக்கது.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, சீனாவில் முதல்முறை நடைபெற்று வரும் பன்நோக்க உலகப் பொருட்காட்சியாகும். அரை ஆண்டு நடைபெறும் அது அக்டோபர் 31ம் நாள் நிறைவடையும்.