அக்டோபர் 16ம் நாள் பிற்பகல் 2.30மணி வரை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவை இந்நாளில் பார்வையிட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 9லட்சத்தைத் தாண்டியது. இப்பூங்கா திறந்து விடப்பட்ட பிறகு, மிக அதிகமாக பதிவாகியுள்ள எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மே திங்கள் முதல் நாள் தொடக்கம் பொது மக்களுக்கு திறக்கப்பட்ட உலகப் பொருட்காட்சிப் பூங்கா, சீராகவும் நிதானமாகவும் செயல்பட்டு வருகிறது. அதன் சேவை நிலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அக்டோபர் 8ம் நாளன்று வரை இதைப் பார்வையிட்ட பயணிகளின் மொத்த எண்ணிக்கை 6கோடியைத் தாண்டியுள்ளது என்று அறியப்படுகிறது.