16ம் நாள் இரவு 6மணி வரை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவைப் பார்வையிட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு நாளிலேயே 10லட்சத்தைத் தாண்டியது. இப்பூங்கா திறந்து விடப்பட்ட பிறகு, மிக அதிகமாக பதிவாகியுள்ள எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. மே திங்கள் முதல் நாள் தொடக்கம் இது வரை சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை 6கோடியே 45லட்சத்து 89ஆயிரத்து 600 ஆகும்.