திட்டப்படி 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு நவம்பர் 11,12 ஆகிய நாட்களில் சியோல் நகரில் நடைபெறும். இவ்வுச்சி மாநாடு ஆர்ப்பாட்டம், பயங்கரவாத தாக்குதல், போக்குவரத்துத் தடை உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது என்றும், உச்சி மாநாடு பாதுகாப்பாக, தங்கு தடையின்றி நடைபெறுவதை முழுமூச்சுடன் உத்தரவாதம் செய்யும் என்று தென் கொரிய காவற்துறை தெரிவித்தது.
இதன் பொருட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவில் 50 ஆயிரம் காவற்துறையினரை அனுப்ப தென் கொரிய காவற்துறை ஆயத்தம் செய்து வருகிறது. தவிரவும், சியோல் நகரின் பொது இடர்காப்புக்கும் போக்குவரத்துக்கும் இக்காவற்துறையினர் சேவை புரிவர். தென் கொரியா, "பாதுகாப்பான நாடுதான்" என்பதை உலகிற்கு கோடிட்டுக்காட்டும் என்று தென் கொரிய காவற்துறை கூறுகிறது.