நகர புத்தாக்கம் மற்றும் தொடரவல்ல வளர்ச்சி என்ற தலைப்பில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் உச்சி மாநாடு, உலகப் பொருட்காட்சி மையத்தில் அக்டோபர் 31ம் நாள் நடைபெறவுள்ளது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகார ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புப் பணியகத்தின் தலைவர் ஹுங் ஹாவ் 19ம் நாள் இச்செய்தியை வெளியிட்டார்.
அதன் துவக்க விழாவில், சீனத் தலைவர் முக்கிய உரை நிகழ்த்துவார். ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன், சர்வதேச கண்காட்சி ஆணையத்தின் தலைமைச் செயலாளர் லாசெர்டலஸ் ஆகியோரும் துவக்க விழாவில் உரை நிகழ்த்துவர் என்று அறியப்படுகிறது.