11வது சீன மேற்கு பகுதிப் பொருட்காட்சி 22ம் நாள் முற்பகல் தென்மேற்கு சீனாவின் சாங்து நகரில் துவங்கியது. வளர்ச்சியும், திறப்பும், கூட்டு வெற்றி மற்றும் பகிர்வும் என்பது, இப்பொருட்காட்சியின் தலைப்பாகும். சீன மேற்கு பகுதியின் முக்கிய வர்த்தக மற்றும் முதலீட்டு மேடையான இப்பொருட்காட்சி, 70 ஆயிரம் கோடி யுவானுக்கு மேலான வர்த்தகத் தொகையை நனவாக்கக் கூடும் என்று மதிப்பிடப்படுகிறது. லாவோஸ், நேபாளம், சிம்பாபவே, வியட்நாம், கம்போடியா முதலிய நாடுகளின் 40க்கு மேலான அரசு அலுவர்கள் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்வர்.
இப்பொருட்காட்சியில், வெளிநாட்டு தொழில்நிறுவனங்கள், பங்கேற்கும் மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கையில் சுமார் 30 விழுக்காடு வகிக்கின்றன. தென் கொரியாவின் Sumsang குழுமத்தின் சீன முதலீட்டு தொழில்நிறுவனத்தின் மேற்கு மண்டல மேலாளர் Hangyu Kim கூறியதாவது
சீன அரசு நடைமுறைப்படுத்திய மேற்கு பகுதி வளர்ச்சி நெடுநோக்குக் கொள்கையில், சாங்து நகரம், முக்கிய இடத்தில் உள்ளது. மேற்கு பகுதி, சீன பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்குத் தலைமை பங்கு ஆற்றும் என்று நான் நம்புகிறேன். இவ்விடத்தின் வளர்ச்சியில் மிக பெரிய உள்ளார்ந்த ஆற்றல் உள்ளது. Sumsang குழுமத்தைப் பொறுத்தவரை, இது ஒரு நல்ல வாய்ப்பாகும். எனவே, இப்பொருட்காட்சியில் கலந்து கொள்கிறோம் என்று அவர் கூறினார்.
மேற்கு பகுதி பொருட்காட்சி, சீன தொழில்நிறுவனங்கள் வெளிநாடுகளில் சந்தையை விரிவாக்குவதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. சாங்து செய்தித் தொடர்பு தொழில்நிறுவனத்தின் தலைவர் zhang ya கூறியதாவது
இப்பொருட்காட்சி, பல மேம்பாடுகளை வெளிப்படுத்துகின்றது. முதலில், அரசு ஏற்பாடு செய்த மேடை, நம்பகமானது. இரண்டாவதாக, மிக அதிக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகர்கள் கூடிய இப் பொருட்காட்சி, எமக்கு பரப்புரை செய்து கொள்ள நல்ல வாய்ப்பாகும் என்று அவர் கூறினார்.
இங்குள்ள சர்வதேச ஒத்துழைப்பு அரங்கு, தென் கொரியா, ஜப்பான், தெற்காசியா, ஆசியான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பன்னாட்டுத் தொழில்நிறுவனங்களை வெளிப்படுத்தும். அது ஒரு சர்வதேச வர்த்தக மேடையை உருவாக்கும். ஒத்துழைப்பின் பலன்களை பயன்படுத்தி, மேற்கு பகுதி வளர்ச்சியின் புதிய வெளிநாட்டு திறப்புப் போக்கை முன்னேற்ற இது பாடுபடும்.