20 நாடுகள் குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்கள் கூட்டம் 22ம் நாள் பிற்பகல் தென் கொரியாவின் தெற்கிலுள்ள Gyeong Ju நகரில் துவங்கியுள்ளது. குழுவின் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். உலகின் பொருளாதார வளர்ச்சியிலான சமமின்மை மற்றும் நாணய மாற்று விகிதப் பிரச்சினைகள் பற்றி கூட்டத்தில் கலந்து கொண்டோர் விவாதிப்பர். அடுத்த திங்களில் நடைபெற உள்ள 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டுக்கென இறுதி நிகழ்ச்சி நிரலை உருவாக்க ஆயத்தம் மேற்கொள்வர்.
மாற்று விகிதப் பிரச்சினை நடப்புக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் அம்சங்களில் ஒன்றாகும். அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததால் ஏற்பட்ட சர்வதேச மாற்று விகிதச் சர்ச்சை நடப்புக் கூட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் என்று சந்தைத் துறையில் பொதுவாக விரும்பப்பட்டுள்ளது.