11வது சீன மேற்குப் பகுதி சர்வதேசப் பொருட்காட்சியின் ஒரு முக்கிய பகுதியாக, முதலாவது சீன-இந்திய வணிகக் கருத்தரங்கு 22ம் நாள் Cheng Du நகரில் நடைபெற்றது. சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளின் உயர் அதிகாரிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பல நிபுணர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர்.
நடப்புக் கருத்தரங்கில் சீன, இந்திய தரப்புகள் வெகுவாக கவனம் செலுத்தியுள்ளன. சிச்சுவான் மாநிலத்தின் துணை தலைவர் Zhang Zuo Haஉம், சீனாவிலான இந்தியத் தூதர் டாக்டர் எஸ். Jaishankarரும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினர்.
"கையோடு கை கோர்த்து ஒத்துழைத்து, கூட்டாக வளர்வது—சீனாவின் மேற்குப் பகுதியும், இந்தியாவும்" என்பது இக்கருத்தரங்கின் தலைப்பாகும். சீன-இந்திய வணிக ஒத்துழைப்பு மாதிரி பற்றி விவாதித்து, வணிக ஒத்துழைப்பு வழியை விரிவாக்கி, சீனா குறிப்பாக மேற்குப் பகுதிக்கும் இந்தியாவுக்குமிடை பொருளாதார வர்த்தக பரிமாற்றத்தையும், முதலீட்டு ஒத்துழைப்பையும் தூண்ட இக்கருத்தரங்கு பாடுபடும்.