22ம் நாள் சி ச்சுவான் மாநிலத்தின் சந்து நகரில், 3வது சீன மேற்குப்பகுதி சர்வதேச ஒத்துழைப்பு கருத்தரங்கு துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் துணை தலைமை அமைச்சருமான வாங் ச்சீ சன்னும், நேபாளம், கம்போடியா, லாவோஸ், ஜிம்பாப்வே, வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்களும், இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
வாங் ச்சீ சன் தலைமை உரை நிகழ்த்தினார். எல்லை வர்த்தகத்தை மேம்படுத்தி, எல்லை பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, எரியாற்றல் மற்றும் வேளாண், வனம், கால்நடை ஆகிய தொழில் துறைகளின் வளர்ச்சியை சீனாவின் மேற்குப்பகுதி முன்னேற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.