சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் சான்து நகரில் நடைபெற்று கொண்டிகின்ற 11வது சீன மேற்கு பகுதி பொருட்காட்சியில், தெற்காசிய நாடுகளின் காட்சியரங்கு நிறுவப்பட்டது. இதில் சுமார் 100 பாகிஸ்தான் தொழில்நிறுவனங்கள் கலந்து கொண்டன. இப்பொருட்காட்சி, தொழில்நிறுவனங்களின் நல்ல வாய்ப்பாக அமைந்தது. இதன் மூலம், சீன தொழில்நிறுவனங்களுடன் வர்த்தகத்தை வலுப்படுத்த வேண்டுமென சான்து நகரிலுள்ள பாகிஸ்தான் துணை நிலை தூதர் ஹசான் ஹாபீப் தெரிவித்தார். சீன மேற்கு பகுதி பொருட்காட்சி, ஒரு நல்ல வர்த்தக மேடையாகும். அனைத்து நாடுகளின் வணிகர்கள் இதில் கலந்து கொண்டு பண்பாட்டு மற்றும் வர்த்தக பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
சீன-பாகிஸ்தான் உறவு, குறிப்பாக, இரு தரப்பு வர்த்தக உறவு, மேலும் ஆழமாக வளர வேண்டுமென பாகிஸ்தானின் காராச்சி நகரத்தைச் சேர்ந்த வணிகர் அசீப் அலி விருப்பம் தெரிவித்தார்.