சீனாவின் 11வது மேற்கு பகுதியின் சர்வதேச பொருட்காட்சி 22ம் நாள் பிற்பகல் சிச்சுவான் மாநிலத்தின் தலைநகர் சென்துவில் துவங்கியது. சீனத் துணைத் தலைமை அமைச்சர் வாங் ச்சி சான் துவக்க விழாவில் கலந்து கொண்டார். கம்போடிய நாடாளுமன்றத் தலைவர், லாவோஸ் துணை அரசுத் தலைவர், நேபாளத் துணை அரசுத் தலைவர், சிம்பாபுவே துணை அரசுத் தலைவர், வியட்நாமின் துணை தலைமை அமைச்சர் முதலிய வெளிநாட்டு லைவர்களும் அதில் கலந்து கொண்டனர்.
திறப்பு மற்றும் வளர்ச்சியை கூட்டாக அனுபவிப்பது மற்றும் வெற்றி பெறுவது என்ற தலைப்பில், இந்த பொருட்காட்சி 5 நாட்களாக நடைபெறும். சீனாவின் மேற்கு பகுதியின் சர்வதேச ஒத்துழைப்பு கருத்தரங்கு, சீன-இந்திய வணிக கருத்தரங்கு உள்பட 8 முக்கிய நடவடிக்கைகள் இதில் நடத்தப்படும் என்று அறியப்படுகிறது. 44 நாடுகள் மற்றும் பிரதேசங்கள், சீனாவின் 30 மாநிலங்கள் மற்றும் மாநகரங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 3,153 தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்வதாக தெரிகிறது.