சீனாவின் மேற்கு பகுதியின் 11வது சர்வதேசப் பொருட்காட்சி 22ம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் சென்து நகரில் துவங்கியது. இலங்கை உள்ளிட்ட 44நாடுகள் மற்றும் பிரதேசங்களின் சுமார் ஆயிரம் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளன. சீனாவுக்கான இலங்கை தூதரகத்தின் வணிக கவுன்சிலர் அலேக்சி குனசேகர எமது செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், சீனாவின் இந்த பொருட்காட்சியில் இலங்கை அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இரு நாடுகளிடையே பொருளாதார வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறைகளில் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.