24ம் நாள் காலை 10.17மணி வரை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பூங்காவில் சுற்றுலா மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 7கோடியைத் தாண்டியது. அத்துடன், திட்டமிடப்பட்ட இந்த இலக்கு முன்னதாகவே நனாவாகியுள்ளது. உலகப் பொருட்காட்சியின் 159ஆண்டுகால வரலாற்றில், ஷாங்காய் மாநகரில் நடைபெற்ற நடப்பு பொருட்காட்சியின் அளவும் செல்வாக்கும் மிக உயர்ந்த பதிவை உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்ககது.
உலகப் பொருட்காட்சி, வளரும் நாட்டில் நடத்தப்படுவது இதுவே முதல்முறை. இதைப் பார்வையிட்ட பயணிகள் வருகை தந்த நாடுகளின் எண்ணிக்கையும் இதில் கலந்து கொண்ட தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையும், புதிய வரலாற்று பதிவுகளை உருவாக்கின.
பல்வேறு நாடுகளின் காட்சி அரங்குகள், பல்வகையான மிக்க பண்பாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள், அறிவியல் தொழில் நுட்பத் துறையில் மிகப் புதிய சாதனைகள், எரியாற்றல் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கண்ணோட்டம் முதலிய தலைசிறந்த அம்சங்கள், நடப்பு பொருட்காட்சியின் தனிச்சிறப்பியல்புகளாகும்.