2010ம் ஆண்டு குவாங்சோ ஆசிய விளையாட்டு வீரர்கள் கிராமம் 5ம் நாள் அதிகாப்பூர்வமாக துவக்கப்பட்டுள்ளது. அன்று முதல் 45 ஆசிய நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து வரும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீரங்கனைகள் குவாங்சோ வந்தடைந்து இதில் தங்கியிருப்பர். சீனப் பிரதிநிதி குழு கிராமத்தில் கொடி ஏற்றிய முதல் குழுவாக பதிவு செய்துள்ளது.
சீனாவின் தேசிய ஒலிம்பிக் குழு, நீச்சல் குழு, பெண் ஹாக்கி குழு உள்ளிட்ட குழுகளின் 100க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீரங்கனைகள் கொடி ஏற்ற விழாவில் கலந்து கொண்டனர்.
நவம்பர் 12ம் நாள் துவங்க உள்ள குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 700 வீரர்கள் 476 போட்டிகளில் தங்க பதக்கம் பெறுவதற்காகப் போட்டியிடுவர்.