• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.நா தலைமைச்செயலாளரின் வேண்டுகோள்
  2010-11-06 18:03:34  cri எழுத்தின் அளவு:  A A A   
20 நாடுகள் குழுவின் உச்சி மாநாடு நவம்பர் 11, 12ம் நாட்களில் தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெறும். ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் 5ம் நாள், 20 நாடுகள் குழுவின் தலைவர்களுக்கு மடல் அனுப்பி, பல்வேறு நாடுகள் இந்த வாய்ப்பை இறுகப்பற்றி, கருத்து வேற்றுமைகளைக் குறைத்து, உலகப் பொருளாதாரம் தொடர்ந்து மீட்சியடைவதை உத்தரவாதம் செய்ய வேண்டும். ஐ.நாவின் புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்கு திட்டமிடப்படி நனவாக்குவதைத் தூண்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஐ.நா தலைமைச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர் Martin Nesirky நியூயார்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, வளர்ச்சி பிரச்சினை பற்றி இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களுடன் முக்கியமாக விவாதிக்கும் பொருட்டு, அடுத்த வாரம் பான் கி மூன் சியோல் நகருக்கு புறப்படவுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040