குவாங்சோவில் சீனத் தலைமையமைச்சரின் சந்திப்பு
2010-11-12 21:03:01 cri எழுத்தின் அளவு: A A A
சீனத் தலைமையமைச்சர் வென்ச்சியாபாவ் 12ம் நாள் குவாங்சோவில் பாகிஸ்தான் அரசுத் தலைவர் Asif Zardariஐயும், தாய்லாந்து தலைமையமைச்சர் Abhisitஐயும் சந்தித்துரையாடினார். Asif Zardariஐச் சந்தித்த போது, பாகிஸ்தானில் இயற்கை சீற்றுத்துக்கு பிந்திய மறுசீரமைப்புக்கு சீனா முழுமூச்சுடன் உதவி வழங்கும் என்றும், பாகிஸ்தான் மக்கள் உண்மையான நன்மைகளை பெற செய்யும் பொருட்டு, பாகிஸ்தான் தரப்புடன் எதார்த்த ஒத்துழைப்பை விரிவாக்க விரும்புகிறது என்றும் வென்ச்சியாபாவ் தெரிவித்தார். வேளாண்மை, நீர் சேமிப்பு, அடிப்படை வசதிகளின் கட்டுமானம் உள்ளிட்ட சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, முக்கிய சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் ஒருங்கிணைப்பை நெருக்கமாக்கி, இரு தரப்புகளின் கூட்டு நலனைகளைப் பேணிகாத்து, விரைவுபடுத்த பாகிஸ்தான் விரும்புவதாக Asif Zardari தெரிவித்தார். சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலம் என்ற வாய்ப்பை சீனாவும் தாய்லாந்தும் பயன்படுத்தி, இரு நாட்டுப் பொருளாதார வர்த்தக உறவின் வளர்ச்சியைத் தூண்ட விரும்புவதாக வென்ச்சியாபாவ் Abhisitஐச் சந்தித்த போது தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்