20 நாடுகள் குழு மற்றும் ஆசிய பசிபிக் ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாடுகளில் கலந்து கொள்ள சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் மேற்கொண்ட இப்பயணம் வெற்றிகரமாக முடிந்து விட்டது. ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, இன்னல்களை இணைந்து சமாளிப்பது, கூட்டு வளர்ச்சி ஆகிய அம்சங்களைக் கொண்ட நோக்கம் இப்பயணத்தில் நனவாக்கப்பட்டது. ஹு சிந்தாவுடன் இணைந்து பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜியேச்சு செய்தியாளரிடம் இதைத் தெரிவித்தார்.
4 நாட்கள் பயணத்தில், 20க்கு அதிகமான இரு தரப்பு மற்றும் பல தரப்பு நடவடிக்கைகளில் கலந்து கொண்ட ஹு சிந்தாவ், அமெரிக்கா மற்றும் ரஷியாவின் தலைவர்களுடன் இணைந்து, இரு தரப்புறவு, பொது அக்கறை வாய்ந்த சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் பற்றி கருத்துக்களை பரிமாறிக் கொண்டு, பல பொது கருத்துக்களை உருவாக்கினார்.