ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்ற தலைவர்களின் 18வது அலுவல் தொடர்பற்ற கூட்டத்தின் 2ம் கட்ட கூட்டம் 14ம் நாள் ஜப்பானின் Yokohamaவில் நடைபெற்றது. பல்வேறு தரப்புகளுடன் ஒன்றுக்கொன்று அனுபவங்களைக் கற்றுக்கொண்டு, மேம்பாட்டை பயன்படுத்தி குறைகளை நிவர்த்தி செய்து, சமத்துவ முறையில் ஒத்துழைத்து, கூட்டாக வளர சீனா விரும்புவதாக சீன அரசுத் தலைவர் ஹூச்சிந்தாவ் கூட்டத்தில் உரை நிகழ்த்திய போது தெரிவித்தார்.
இவ்வாண்டு ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தின் வளர்ச்சியடைந்த உறுப்பு நாடுகள், Bogor இலக்குகளை நனவாக்குவதற்கு இறுதி கால வரம்பாகும். எனவே இவ்வாண்டு, இவ்வமைப்பின் வளர்ச்சிக்கு மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஹூச்சிந்தாவ் தெரிவித்தார். இவ்வமைப்பு மூன்று துறைகளில் மேலதிக பங்காற்ற வேண்டும். ஒன்று, வர்த்தகம் மற்றும் முதலீட்டின் தாராளமயமாக்கம் மற்றும் வசதி கட்டுமானங்களை தொடர்ந்து தூண்டி, வட்டார பொருளாதார ஒருமைப்பாட்டு போக்கினை விரைவுபடுத்த வேண்டும். இரண்டு, அதிக நெடுநோக்கு திட்டங்களை விரைவாக செயல்படுத்தி, பொருளாதார அதிகரிப்பு தரத்தை உயர்த்த வேண்டும். மூன்று, பொருளாதார தொழில் நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்தி, வளர்ந்து வரும் உறுப்பு நாடுகளின் தற்சார்பு வளர்ச்சி ஆற்றையும், பொருளாதார அதிகரிப்பு ஆற்றலையும் வலுப்படுத்த வேண்டும் என்று ஹூச்சிந்தாவ் தெரிவித்தார்.