இன்றிரவு குவாங் சோ மாநகரின் Hai Xin Sha சதுக்கத்தில் நடைபெற்றது. இனிய சங்கீதத்துடன், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் புனிதத் தீபம் அணைக்கப்பட்டது. குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக முடிவடைந்தது என்பதை இது எடுத்துக் காட்டியது.
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய வீரர்கள் தங்களது வலுவான ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, கபடி, தடகள விளையாட்டுக்கள், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் முதலிய விளையாட்டுகளில் இந்தியா சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ளது. போட்டியின் இறுதியில், 14 தங்கம் 17 வெள்ளி 33 வெண்கலப் பதக்கங்களுடன், இந்தியா பதக்கப் பட்டியலின் 6வது இடத்தில் உள்ளது.
இத்துடன், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான செய்தி அறிவிப்புப் பணிகள் முடிவுற்றன. நாளை, குவாங் சோவிலிருந்து புறப்பட்டு, பெய்சிங்கிற்கு திரும்புகிறேன். இந்த நேரத்தில் தாங்கள் அனைவரும் அளித்த ஆதரவுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் செய்தி மையத்திலிருந்து மோகன்