டிசம்பர் 3ம் நாள், 19வது சர்வதேச மாற்றுத் திறனுடையோர் நாளாகும். கடந்த சில ஆண்டுகளாக, சீன அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாற்றுத் திறனுடையோரின் உரிமை மற்றும் நலனைப் பாதுகாத்து அவர்களுக்கான வேலைவாய்ப்பை முன்னேற்றி வருகிறது. சமூகத்தின் பல்வேறு துறையினரும், ஆக்கமுடன் இந்த இலட்சியத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு அன்பு காட்டி, பாகுபாடை நீக்கி வருகின்றனர்.
சீனாவில், 8 கோடியே 30 இலட்சம் மாற்றுத் திறனுடையோர்கள் வாழ்கின்றனர். அவர்கள் நல்ல வாழ்க்கையை அனுபவிக்கச் செய்வது, சீன அரசு நீண்டகாலமாக அதிக முக்கியத்துவம் அளிக்கின்ற பிரச்சினையாகும். 2006ம் ஆண்டு முதல், நடுவண் நிதி, 571 கோடி யுவானை ஒதுக்கி, இந்த இலட்சியத்துக்கு நிதானமான நிதி உத்தரவாத முறைமையை நிறுவியது. மாற்றுத் திறனுடைய குழந்தைகளின் குணப்படுதலுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. 2009ம் ஆண்டு வரை, 3 ஆயிரத்துக்கு மேலான சிறப்பான சேவை நிறுவனங்கள், 1 இலட்சத்து 10 ஆயிரம் அறிவித் திறன் குன்றியோருக்கு சேவை புரிந்தன.
அவர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினை குறித்து, சீன மாற்றுத் திறனுடையோர் சம்மேளனத்தின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவின் பணியாளர் zhang yao அம்மையார் கூறியதாவது
உரை 2
சீன மாற்றுத் திறனுடையோர் சமமேளனம், வேலைவாய்ப்பு சேவை பற்றிய பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, பல வழிகளில் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அவர்கள் தற்சார்பாக சொந்த சிறப்பின்படி வேலை புரிவதற்கு வழிகாட்டுகிறது என்று அவர் கூறினார்.
தற்போது, மாற்றுத் திறனுடையோரின் சமூக உத்தரவாத மற்றும் சேவை முறைமையை சீனா விரைவாக முன்னேற்றி வருகிறது. அவர்களது அடிப்படை வாழ்க்கை, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு முதலிய அடிப்படை தேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்க்கை நிலையையும் பன்முக வளர்ச்சியையும் முன்னேற்றி வருகிறது. Zhangyao அம்மையார் மேலும் கூறியதாவது
உரை 3
சமூகம், மாற்றுத் திறனுடையோரை அனுதாபப் பார்வையில் மட்டுமே பார்க்கக் கூடாது. உரிமை உத்தரவாதத்தில் அவர்களுக்கு சேவை புரிய வேண்டும். மாற்றுத் திறனுடையோர், சாதாரண மக்களைப் போல வேலை செய்ய முடியும். அவர்கள் மதிப்புடன் வாழ முடியும். ஏன் சாதாரண மக்களை விட மேலும் சிறப்பாக வாழ முடியும் என்று அவர் கூறினார்.
உலகின் 65 கோடி மாற்றுத் திறனுடையோரில் 80 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் உள்ளனர். அவர்களது பல்வேறு உரிமைகளை உத்தரவாதம் செய்கின்ற பாதையில் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு மேலதிக முயற்சி தேவைப்படும்.