10வது ஆசியப் பாராலிம்பிக் தீபம் ஏற்பு மற்றும் தீபத் தொடரோட்ட துவக்க விழா 4ம் நாள் சீன தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மகாபண்டபத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் நிரந்தர உறுப்பினரும் துணை அரசுத் தலைவருமான யீச்சிங்பின் தானே தீபத்தை ஏற்றியதோடு தீபத் தொடரோட்ட நடவடிக்கையின் துவக்கத்தையும் அறிவித்தார். 2010ம் ஆண்டு ஆசிய பாராலிம்பிக் தீபத் தொடரோட்டம் துவங்குவதென அவர் அறிவித்தார்.
2008ம் ஆண்டு பெய்ஜிங் பாராலிம்பிகில் தங்க பதக்கம் வென்ற ஆடவர் மேசை பந்தாட்ட மாற்றுத் திறனால் வீரர் ge yang துணை அரசுத் தலைவர் யீச்சிங்பினிடமிருந்து தீபத்தை முதலில் ஏந்தினார். அது முதல் ஆசிய பாராலிம்பிக் போட்டியின் புனித தீபத் தொடரோட்டம் துவங்கியுள்ளது. இந்த நடவடிக்கையில் 20 வீரர்கள் கலந்து கொண்டனர். ஆசிய பாராலிம்பிக் தீபம் சிறப்பு விமானம் மூலம் குவாங்சோவுக்கு அனுப்பப்பட்டது.