சர்வதேச தன்னார்வத் தொண்டர் நாளான டிசெம்பர் 5ம் நாள் வருவதை வரவேற்க சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கின் தொடர்புடைய வாரியங்கள் 4ம் நாள் பல பண்பாட்டுத் தன்னார்வ சேவை நடவடிக்கைகளை மேற்கொண்டன.
வாழ்க்கையை மனமுருகச் செய்யும் பண்பாடு என்பது இந்த நடவடிக்கையின் முக்கிய தலைப்பாகும். பண்பாட்டுத் தன்னார்வ தொண்டர்களும் அவர்களுக்குச் சேவைபுரிவோர்களும் கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றின. பேட்டி காண்பது, திரைப்படங்களை திரையிடுவது போன்ற வடிவங்களில் நகரவாசிகளுக்கு அவர்கள் தன்னார்வ சேவை வழங்கினர்.
தற்போது பெய்ஜிங் மாநகரில் பதிவு செய்துள்ள பண்பாட்டுத் தன்னார்வத் தொண்டர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்துக்கு மேலாகும்.