2010ம் ஆண்டு குவாங்சோ ஆசிய பாராலிம்பிக் வீரர் கிராமம் 5ம் நாள் துவங்கிய பின் சீராக இயங்கிவருகின்றது. 8ம் நாள் இந்த கிராமம் அதிகாரப்பூர்வமாக விளையாட்டு வீரர்களை வரவேற்கும்.
பாராலிம்பிக்கில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அவர்களது அணியின் அலுவலர்களுக்கும் இக்கிராமம் மிகச் சிறந்த முறையில் சேவை வழங்கும். ஆசிய விளையாட்டுப் போட்டி போல ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியும் சிறந்த முறையில் நடைபெறும். அதற்கான உரிய சேவை உத்தரவாதம் செய்யப்படும். கிராமத்தில் அமைந்துள்ள 512 வீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தடையில்லாத வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன..