2010ம் ஆண்டு ஆசிய பாராலிம்பிக் விளையாடாட்டுப் போட்டி 12ம் நாளிரவு சீனாவின் குவாங்சோ மாநகரில் துவங்கியது. சீன துணைத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் துவக்க விழாவில் கலந்து கொண்ட ஈரான், பிலிப்பைன்ஸ், லாவாஸ், மலேசியா, வங்காளதேசம் முதலிய நாடுகளின் தலைவர்களையும் சர்வதேச பாராலிம்பிக் ஆணையத்தின் தலைவர் பிலிப் கிரேவன், ஆசிய பாராலிம்பிக் ஆணையத்தின் தலைவர் அபு சாரின் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு அமைப்புகளின் அலுவலர்களையும் சந்தித்தார்.
அவர்கள் குவாங்சோ ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுத் துவக்க விழாவில் கலந்து கொண்டமைக்கு லீக்கெச்சியாங் உளமார்ந்த வரவேற்பு தெரிவித்தார். அத்துடன் இவ்விளையாட்டுப் போட்டிக்கு அவர்கள் ஆற்றல் மிக்க ஆதரவையும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு ஆற்றிய ஆக்கமுள்ள சாதனைகளையும் லீக்கெச்சியாங் உயர்வாக மதிப்பிட்டார்.
குவாங்சோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒழுங்கான முறையில் நடைபெறுவதை சந்திப்பில் கலந்து கொண்டோர் அனைவரும் பாராட்டினர். மாற்று திறனாளிகளின் விளையாட்டுப் போட்டியின் வளர்ச்சியை முன்னேற்றுவதில் சீனா வெளிக்காட்டிய கவனம் உற்சாகம் மற்றும் முயற்சியை அவர்கள் புகழ்ந்து மதிப்பிட்டனர். நடப்புப் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.