சீனாவுடன் உறவை மேம்படுத்துவதற்கும் சீனாவை மேலும் சீராக அறிந்து கூட்டு வெற்றி காணும் உறவை உருவாக்குவதற்கும் இந்தியா முக்கியத்துவமளிக்கிறது. இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் அம்மையார் 13ம் நாள் இவ்வாறு தெரிவித்தார். சீன தலைமையமைச்சர் வென்சியாபாவின் இந்திய பயணத்தை வரவேற்க, இந்திய வணிக மற்றும் தொழிற்துறை சம்மேளனம் 13ம் நாள் புதுதில்லியில் விவாதக்கூட்டத்தை நடத்தியது.
இந்தியா மேலதிக சீன முதலீட்டை குறிப்பாக அடிப்படை வசதிகள் துறையிலான முதலீட்டை பெற விரும்புவதாக நிரூபமா ராவ் அம்மையார் தெரிவித்தார். இரு நாடுகளின் இளைஞர்கள் இரு நாட்டுறவின் வளர்ச்சி சாதனை மேலதிகமாக பார்க்க வேண்டும். அவர்கள் புதிய கண்ணோட்டத்தில் இரு நாட்டுறவை அணுக வேண்டுமெனவும் அவர் முன்மொழிந்தார்.