பயணத்தின் போது, இரு தரப்புறவை வளர்ப்பது, பல்வேறு துறைகளிலான இருதரப்பிடை நலன் ஒத்துழைப்பை ஆழமாக்குவது, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் முதலியவற்றைக் குறித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள, வென் ச்சியா பாவ், இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளையும், சந்திப்புகளையும் நடத்துவார். சீன-இந்திய தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் வைர விழாவுக்கான கொண்டாட்ட நடவடிக்கைகளிலும், அவர் மன் மோகன் சிங்குடன் இணைந்து கலந்துகொள்வார். இந்தியாவின் பல்வேறு துறையினருடன், அவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்.