இந்தியத் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கின் அழைப்பின் பேரில், சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் 15ம் நாள் புதுதில்லிக்குச் சென்றடைந்து அதிகாரப்பூர்வப் பயணத்தைத் துவக்கினார்.
சீனாவும் இந்தியாவும் 2000 ஆண்டுகால பாரம்பரிய நட்புறவைக் கொண்டுள்ளன. 21ம் நூற்றாண்டில் நுழைந்த பிறகு, இரு தரப்பின் கூட்டு முயற்சியுடன், சீன-இந்திய நட்பு ஒத்துழைப்பில் பன்முகங்களில் வேகமான முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. அமைதி மற்றும் செழுமையை நோக்கிய நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவு வளர்ந்து வருகிறது. இவ்வாண்டு இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவாகும். சீன-இந்திய உறவு முக்கிய வாய்ப்புகளை எதிர்நோக்கி, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது என்று வென்சியாபாவ் விமான நிலையத்தில் உரை நிகழ்த்திய போது தெரிவித்தார்.