சீனாவும் இந்தியாவும், நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை முன்னேற்றும் போது, பண்பாடு மற்றும் இளைஞர்கள் பரிமாற்றத்தில் அதிகக் கவனம் செலுத்தி, புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கக வேண்டும். கருத்து வேற்றுமைகள் மற்றும் முரண்பாடுகளைத் தணிக்க வேண்டும். இந்தியாவில் பயணம் மேற்கொண்ட சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ், 17ம் நாள் புதுதில்லியில் இரு நாட்டுப் பண்பாட்டுத் துறையினர்களுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.
இந்தியாவில் அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துக் கொள்ளும் முன், அவர் புதுதில்லியில் இரு நாட்டுப் பண்பாட்டுத் துறையினர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்.
இரு நாடுகளின் இலக்கியம், திரைப்படம், கல்வியியல், செய்தி முதலிய துறைகளின் 10க்கு மேற்பட்ட பிரமுகர்கள் இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.