2010ம் ஆண்டின் டிசம்பர் 26ம் நாள் முதல், நிதி அமைப்புகளின் ரென்மின்பி வைப்புத் தொகை மற்றும் கடனின் வட்டி விகிதம், 0.25 விழுக்காடு அதிகரிக்கப்படும் என்று சீன மக்கள் வங்கி 25ம் நாளிரவு அறிவித்தது.
2011ம் ஆண்டு சீனாவில் பணவீக்கம் ஏற்படும் சாத்தியக்கூறு தொடர்ந்து அதிகமாக உள்ளது. இவ்வாண்டுக்குள் வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்துவது, எதிர்காலத்தில் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கு அதிக வாய்ப்புகளை வழங்கும். மலிவான கடன் மீதான சந்தையின் அளவுக்கு மீறிய தேவையைத் தடுக்கத் துணை புரியும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தார்.




அனுப்புதல்













