ரஷ்யாவில் செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் பயணத்தை ஒத்த சோதனைகள் ரஷ்ய தரப்பின் ஒருங்கிணைப்பில் செவ்வாய் – 500 என்ற பரிசோதனைப் பயணத்திட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் 3ம் நாள் துவங்கிய இந்த ஒத்திகைப் பயணம் புவியிலேயே, செவ்வாய் கிரகத்தின் அம்சங்களும், விண்வெளிப் பயணத்தின் நுணுக்கங்களும் உட்புகுத்தப்பட்டு, பொய்யான மெய்யாக 250 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இருவர், ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று பேர், ஒரு சீனர் என 6 பேர் கொண்டது இந்த செவ்வாய் கிரகச் சோதனைப் பயணக்குழு இதில் முக்கிய பகுதியாக செவ்வாய் கிரகத்தில் மனிதன் கால்பதிக்கும் நடவடிக்கையை கடந்த திங்களன்றும், 18ம் நாளன்றும் இப்பயணக்குழு மேற்கொண்டது. இரண்டாவது தரையிறங்கு முயற்சியில் சீனாவைச் சேர்ந்த வாங் யுவே, ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்மோலேயேவ்ஸ்கி இருவரும் பங்கேற்றனர்.