• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தலைவர்களின் பரிசீலனைப் பணிகள்
  2011-03-10 19:28:25  cri எழுத்தின் அளவு:  A A A   

11வது சீன தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத் தொடரின் சில பிரதிநிதிக் குழுகளின் பரிசீலனைப் பணிகளில், சீனத் தலைமையமைச்சர் வென் சியா பாவ், துணை அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் முதலியோர் மார்ச் 10ம் நாள் காலை கலந்துகொண்டனர்.


சீனத் தலைமையமைச்சர் வென் சியா பாவ் fujian பிரதிநிதிக் குழுவின் பரிசீலனையில் பங்கெடுத்தார். தைவான் நீரிணை இரு கரையின் பொருளாதார மண்டல உருவாக்கத்தை விரைவுபடுத்துவது, பொது நிலைமையை ஒட்டுமொத்தமாகக் கருத்தில் கொண்டு மேற்கொண்ட நெடுநோக்கு கொள்கை தீர்மானமாகும். அப்பிரதேசத்து சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றம், இரு கரையின் பொருளாதார ஒத்துழைப்பைப் பொறுத்தவரை, மிகவும் முக்கியமானது என்று வென் சியா பாவ் குறிப்பிட்டார்.


சீனத் துணை அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் யுன்னான் மாநிலத்தின் பரிசீலனையில் கலந்துகொண்டார். இம்மாநிலத்தின் யிங்ச்சியாங் மாவட்டத்தில் 10ம் நாள் நண்பகல் நிகழ்ந்த ரிக்டர் அளவையில் 5.8ஆகப் பதிவான நிலநடுக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்தினார். பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். வளர்ச்சி வாய்ப்பைப் பற்றிக்கொண்டு, தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040