சீனாவின் யூன்னான் மாநிலத்தின் ying jiangமாவட்டத்தில் 10ம் நாள் ரிக்டர் அளவையில் 5.8 ஆக பதிவான நிலநடுக்கம் நிகழ்ந்த பின் இது வரை குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேலானோர் காயமடைந்தனர். சுமார் 3 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நில நடுக்கம் நிகழ்ந்தவுடன் சீன செஞ்சிலுவைச் சங்கம் விரைந்து மூன்றாவது நிலை பேரிடர் நீக்க மீட்புப் பணியைத் துவக்கியுள்ளது. நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மீட்புதவிப் பொருட்கள் உடனடியாக ஏற்றி அனுப்பப்பட்டன. இதுவரை நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்களின் மதிப்பு பத்து லட்சம் யுவானைத் தாண்டியது.
நிபுணர்கள் நுணுக்கமாக பகுத்தாராய்ந்த பின் அண்மைய நாட்களில் ரிக்டர் அளவையில் 5ஆக பதிவாகும் நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியக்கூறு நிலவுகின்றது என்று சீன நிலநடுக்கத் தடுப்பு ஆணையத்தின் தலைவர் chen jian min11ம் நாள் தெரிவித்துள்ளார்.