• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடலோரப் பிரதேசத்தில் பாதுகாப்புக் கண்காணிப்பு தொகுதி துவக்கப்பட்டுள்ளது
  2011-03-12 16:25:06  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜப்பானின் அணு மின் வசதியின் அணுக் கசிவால் சீனாவுக்கு பாதிப்பு ஏற்படுமா இல்லையா என்பது பற்றி கண்காணிக்க கடலோர நகரங்களில் தொடர்புடைய கண்காணிப்புத் தொகுதியை சீனா துவக்கியுள்ளது. சீனச் சுற்றுச்சூழல் பாதுகாப்பமைச்சின் துணை அமைச்சர் சாங் லீ ச்சுன் சனிக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார். இது வரை நிலைமை இயல்பாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
ஜப்பானில் நிகழ்ந்த ரிக்டர் அளவில் 8.8ஆகப் பதிவான நிலநடுக்கத்தில் அதன் 2 அணு மின்னாக்கிகள் பாதிக்கப்பட்டன. நிலைமையை அறிந்து கொள்ளும் வகையில், சீன அணுப் பாதுகாப்பு ஆணையம் ஜப்பானின் அணு ஆற்றல் பாதுகாப்பு வாரியத்துடன் தொடர்பு கொண்டது. Fukushima-ken அணு மின் நிலையத்துக்கு அருகில் அணிக்கதிர் வீச்சு அதிகரித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று  சாங் லீ ச்சுன் கூறினார். தற்போது சீனாவின் அணு வசதிகள் பாதுகாப்பாக உள்ளன என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040